பொக்ரானில் நடந்த பினாகா மார்க் 2 ராக்கெட் சோதனை வெற்றி
ஜெய்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா மார்க் 2 ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா மார்க் 2 ராக்கெட் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பொக்ரானில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. லாஞ்சரில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.
இந்த ராக்கெட்டை டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவம் கூட்டாக சேர்ந்து தயாரித்துள்ளது. பினாகா மார்க் 2 ராக்கெட்டை பலதரப்பட்ட சோதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

இது குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில்,
பினாகா மார்க் 2 ராக்கெட்சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ராக்கெட்டில் சாதாரண வெடிபொருள் முதல் நவீன வெடிபொருட்களை வரை பொருத்த முடியும். ம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் உள்ள பினாகாவின் சோதனைகள் பொக்ரானில் நடைபெற்று வருகிறது என்றார்.
முன்னதாக பினாகா 1 ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications