மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு தடை – மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: மதுபான விடுதிகளில் அழகிகளின் நடனத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2005 ஆம் ஆண்டு மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

விதிமீறல் சட்டம்:
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டசபையில் மகாராஷ்டிர போலீஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் விதிமுறைகள் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை விதிகளை மீறுவதாக அமைந்து உள்ளது.
அழகிகள் நடனத்துக்குத் தடை:
எனவே, இந்த புதிய சட்டத்திற்கு முரண்பாடாக மட்டும் அல்லாமல், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் அழகிகள் நடனத்துக்கு தடை விதிப்பதால் இதை எதிர்த்து இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகள் சிறை:
அதில், தடையை மீறி செயல்பட்டால் குறைந்தது 3 மாதம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும், ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
உரிமம் ரத்து:
இது தவிர சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமத்தையும் ரத்து செய்ய இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அரசிடம் பதில் கேட்டு நோட்டீஸ்:
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா, பி.சி.பாந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மகராஷ்டிர அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications