தமிழில் வணக்கம் கூறி, நெல்லை மாணவி கேள்விக்கு வீடியோ கான்பரன்சில் பதில் அளித்த மோடி!
டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி, நெல்லையை சேர்ந்த 15 வயது மாணவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவரது கேள்விக்கு விடையளித்தார்.
திருநெல்வேலி நீதிமன்றம் அருகேயுள்ள சங்கர் நகரில் வசிக்கும் கல்யாண குமாரசாமி மற்றும் சேதுராக மாலிகா தம்பதியின் மகள் விசாலினி.

பாளையங் கோட்டை லட்சுமி ராமன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற இவர் சிறுவயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். இதை பாராட்டி, 15 வயதிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விசாலினும் ஒருவர் என்பது சிறப்பு.
ஒவ்வொரு, நகரிலுள்ள சிறந்த மாணவ, மாணவிகளிடம் பேசிக்கொண்டு வந்தபோது, நெல்லை மாணவியிடமும் பிரதமர் பேசினார். விசாலினி தனது பேச்சை, பிரதமருக்கு வணக்கம் என்று சொல்லி ஆரம்பித்தார். உடனடியாக, பிரதமர் மோடியும், வணக்கம் என்று பதிலுக்கு தமிழிலேயே தெரிவித்தார்.

விசாலினி கேட்டது: நான் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த வகையில் அந்த சேவை செய்யப்பட வேண்டும் என்று எனக்கு நீங்கள் வழிகாட்ட முடியுமா?
பிரதமர் பதில்: ராணுவத்தில் சேர்ந்தோ, அல்லது அரசியலுக்கு வந்தோதான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது இல்லை. நாட்டிற்கு சேவை ஆற்ற பல வழிகள் உள்ளன. பட்டமும், வேலையும் மட்டும்தான் நமது தேவை என்று நினைப்பதை நிறுத்த வேண்டும். நமது தேவை, பல்வேறு வகைகளிலான வெளிப்படையான, வித்தியாசமான சிந்தனைகள்.
வீட்டில் அநாவசியமாக செயல்படும் மின்சாதன பொருட்களை ஆஃப் செய்து, மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது கூட தேசத்துக்கு நீங்கள் செய்யும் சேவைதான். போதிய அளவுக்கு மட்டும் சாப்பிட்டுவிட்டு, உணவுகளை வீணாக்காமல் இருப்பதும் நீங்கள் நாட்டுக்கு செய்யும் சேவைதான்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications