நாளை மறுநாள் முசாபர்நகர் செல்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இருபிரிவினரிடையே வன்முறை வெடித்த முசாபர்நகருக்கு நாளை மறுநாள் பிரதமர் மன்மோகன்சிங் செல்ல இருக்கிறார்.
ஒரு ஈவ் டீசிங்கில் தொடங்கிய பிரச்சனை மோதலாகி கொலையாகி இரு பிரிவு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் 48 பேர் வரை பலியாகினர். நூற்றுக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வன்முறையால் நாடு முழுவதும் 11 மாநிலங்களில் மத மோதல் வெடிக்கும் நிலையும் உருவானது. தற்போது மெல்ல மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் முசாபர்நகருக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறுகிறார். பிரதமர் மன்மோகன்சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முசாபர்நகர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications