வெளுத்து வாங்கும் மழை... வாரணாசி பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி!
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: வாரணாசியில் கனமழை பெய்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
வாரணாசியில் இன்று மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் வருகை தர இருந்தார். ஆனால் நேற்று இரவு முதலே அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

பிரதமர் பங்கேற்க இருந்த விழா மேடைகள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வாரணாசி பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தற்போது 3வது முறையாக பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் கனமழையால் இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications