உலகின் உயரமான போர்க் களத்தில், உறைய வைக்கும் குளிரில் தீபாவளி கொண்டாடிய மோடி
ஸ்ரீநகர்: உலகின் உயரமான போர்க்களத்தில், இந்திய ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்காக மேலும் ரூ.745 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தார்.
இந்திய ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் காஷ்மீரிலுள்ள சியாச்சின் ராணுவ முகாமில் தீபாவளி கொண்டாட முடிவு செய்த மோடி, நேற்று சியாச்சின் சென்றார். 5400 மீட்டர் உயரத்தில் உள்ளதால் சியாச்சினை உலகின் உயரமான போர்க்களம் என்று வர்ணிப்பது வழக்கம். அங்கு மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வருகிறது.
இந்நிலையில் உல்லன் ஆடைகள், பனி கண்ணாடி உள்ளிட்ட பல ஆயத்தங்களுடன் மோடி அங்கு விசிட் செய்து ராணுவத்தினருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். அங்கு உறையும் பனிச் சூழலுக்கு நடுவே ராணுவ தளத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களைக் கூறி, தீபாவளி பரிசு பொருட்களை பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சியாச்சின் பயணம் மற்றும் ராணுவ வீரர்களுடனான சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கலந்துக் கொள்ளவில்லை. ராணுவ தளத்தில் வீரர்களுக்கு நடுவே ஹிந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் சேவகனாக இருக்க நான் மிகவும் பெருமை அடைகிறேன். இங்கு வீரர்கள் வாழும் சூழல் கண்கூடாக தெரிகிறது. நாட்டுக்காக இங்கு இக்காட்டான சூழலில் வாழும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது குடும்பத்தினரும் பெருமிதத்தின் உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டியவர்கள்.

சியாச்சின் நிலவும் காலநிலை அனைவரும் அறிந்ததே. 1984ல் இங்கு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் சுமார் 2000 பேர் உயிர்நீத்தனர். இதில் பெரும்பாலானோர் மோசமான காலநிலையால் உயிரிழந்தவர்கள்தான். ஆனால், இங்கிருக்கும் கடுமையான மற்றும் மோசமான குளிரையும் பொருட்படுத்தாமல் நாட்டை காக்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டு, முன்னின்று செயல்படும் வீரரகள், உண்மையில் நம்மை உலக அளவில் பெருமையடையச் செய்கின்றனர்" என்றார் மோடி.
இதன்பிறகு ஸ்ரீநகர் திரும்பிய மோடி, காஷ்மீரில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக, அந்த மாநிலத்துக்கு ரூ.740 கோடி அளவில் நிவாரண நிதியுதவியை அறிவித்தார். மோடியின் வருகையை கண்டித்து காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடையடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்ததால், தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications