For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ்ப்பாணத்துக்கு செல்கிறேன்...: ட்விட்டரில் பிரதமர் மோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை பயணம் மேற்கொள்ளும் தாம் யாழ்ப்பாணம் செல்ல இருப்பதாக ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் 3 நாள் பயணமாக வரும் 13-ந் தேதி இலங்கை செல்ல இருக்கிறார்.

28 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி.

தமது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக நேற்று இரவு ட்விட்டரில் பிரதமர் மோடி எழுதி இருப்பதாவது:

இந்த வாரம் நான் செசெல்ஸ், மொரீசியஸ் மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.

இந்திய- இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இலங்கைக்குச் செல்கிறேன்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுட்ன் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Sunday said he was looking forward to enhancing India's ties with the friendly Indian Ocean countries of Seychelles, Mauritius and Sri Lanka during his five-day visit beginning March 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X