யாழ்ப்பாணத்துக்கு செல்கிறேன்...: ட்விட்டரில் பிரதமர் மோடி
டெல்லி: இலங்கை பயணம் மேற்கொள்ளும் தாம் யாழ்ப்பாணம் செல்ல இருப்பதாக ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் 3 நாள் பயணமாக வரும் 13-ந் தேதி இலங்கை செல்ல இருக்கிறார்.
28 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி.
Apart from addressing the SL Parliament, I will visit Maha Bodhi Society & will visit Jaffna. http://t.co/vwYNEfavwn
— Narendra Modi (@narendramodi) March 8, 2015
தமது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக நேற்று இரவு ட்விட்டரில் பிரதமர் மோடி எழுதி இருப்பதாவது:
இந்த வாரம் நான் செசெல்ஸ், மொரீசியஸ் மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இந்திய- இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இலங்கைக்குச் செல்கிறேன்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுட்ன் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.