உள்நாட்டில் தயாரான மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொல்கத்தா: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பை வந்தார். மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஐ.என்.எஸ்.கொல்கத்தா' என்ற போர்க்கப்பலை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்ட இந்த போர்க்கப்பல், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிக பெரிய போர்க்கப்பல் ஆகும்.
அப்போது நரேந்திரமோடி பேசியதாவது: நேற்று நாம் சுதந்திர தினத்தை கொண்டாடினோம். ஆனால் இந்தியா தற்போது சுதந்திரமாக இருக்க நமது ராணுவ படைதான் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

‘ஐ.என்.எஸ்.கொல்கத்தா' நமது கடற்படை பலத்தை உலகத்துக்கெல்லாம் பறை சாற்றியிருக்கும். இந்த கப்பல், பாதுகாப்பு துறையில் நாம் அடைந்துள்ள சுய சார்புக்கு ஒரு அடையாளம். நமது ராணுவத்தின் சுய நம்பிக்கையையும் இந்த கப்பல் அதிகரிக்கும்.
‘ஐ.என்.எஸ்.கொல்கத்தா' கப்பலின் திறனை பற்றி அறிந்த எந்த ஒரு நாட்டுக்கும், இந்தியாவுக்கு சவால்விடுக்கும் தைரியம் வராது. உலகின் பிற நாடுகளுக்கும் ஆயுதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர வேண்டும் என்பதே நமது கனவு. இதற்காகவே பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரின் பின்னால் இந்த தேசமே இருக்கிறது. உங்களது சேவையை கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார். மேலும், போர்க்கப்பலில் பயணித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர்கள், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, கடற்படை தளபதி ஆர்.கே.தவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications