மோடி அவரும் தூங்க மாட்டார் எங்களையும் தூங்கவிட மாட்டார்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி அவரும் தூங்க மாட்டார் கேபினட் அமைச்சர்களையும் தூங்க விட மாட்டார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய ஊரக வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறுகையில்,

PM Modi neither sleeps nor allows us to sleep: Venkaiah Naidu

நம் பிரதமர் அவரும் தூங்க மாட்டார் மற்றவர்களையும் தூங்கவிட மாட்டார். ஆனால் அது எங்களுக்கு பிடித்திருக்கிறது. ஏனென்றால் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைப்பது பிடித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தை முழுமையாக செயல்படுத்த 5 ஆண்டுகள் தேவைப்படும் என்று சில கேபினட் உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் அத்திட்டத்தை ஓராண்டுக்குள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துவிட்டார்.

பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 7 வாரங்களில் 6.99 கோடி பேருக்கு தற்போது வங்கி கணக்கு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பு நாட்டு மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் அதிலும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது என்றார்.

பார்சிலோனாவுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வெங்கய்யா நாயுடு நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+