இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முழு ஆதரவு: பிரதமர் மோடி உறுதி!
டெல்லி: இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிக்கப்படும் என இஸ்லாமிய தலைவர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தலைவர்களான சென்னையை சேர்ந்த சையது அலி அக்பர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹாஜி அப்துல் ஹபீஸ் கான், மௌலானா அபுபக்கர் பசானி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சையத் அப்துல் ரசீத் அலி உள்பட 10 தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

அப்போது சமூக சூழ்நிலைகளை சீர்படுத்துதல், இஸ்லாமிய இளைஞர்களுக்கான கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிப்பதாகவும், குறிப்பாக மசூதிகள், மதரசாக்களில் உள்ள கோரிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மோடி அவர்களிடம் உறுதி அளித்தார்.
அதேபோல், நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என அவர், இஸ்லாமிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘நாட்டின் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் பாடுபடுவோம்' என இஸ்லாமிய தலைவர்களும் பிரதமரிடம் உறுதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications