பலாத்காரத்தை தடுக்க வழியில்லை.. மோடி தோழி நீத்தா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பா? கேஜ்ரிவால் கோபம்
டெல்லி: டெல்லியில் தினம் தினம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள்; அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட்டுவிட்டு, தனது தோழி நீத்தா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளார் பிரதமர் மோடி.. என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மனைவி நீத்தா அம்பானிக்கு, விவிஐபிகளுக்கு வழங்கப்படும், ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. முகேஷுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானதும், கேஜ்ரிவால் கடும் கோபமடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை டிவிட்டரில் வெளிக்காட்டியுள்ளார்.

பலாத்காரங்கள்
டெல்லியில் தினமும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள். பலமுறை வேண்டுகோள்விடுத்தும் கூட அந்த பெண்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படவில்லை.
|
தோழிக்கு பாதுகாப்பு
பிரதமரோ, தனது தோழிக்கு (நீத்தா அம்பானி), உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளார். இவ்வாறு கேஜ்ரிவால் கூறியதோடு, செய்தி வெளியான பேப்பர் கட்டிங்கையும் அதில் இணைத்துள்ளார்.

பாதுகாவலர்கள்
நீத்தாவின் ஒய் பிரிவு பாதுகாப்பில், 10 ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இடம் பெற்றிருப்பர். நீத்தா செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களும் பயணிப்பர்.

காவல்துறை கட்டுப்பாடு
டெல்லியின் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை வழங்குமாறு கேஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நீத்தா அம்பானி பிரச்சினையை வைத்து குட்டியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications