யுரேனியம் வழங்க விரைவில் முடிவெடுக்க வேண்டும்.. உஸ்பெகிஸ்தானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்..
தாஷ்கண்ட் : இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட மோடி, முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் சென்றார். தலைநகர் தாஷ்கண்டில் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அதிபருடன், மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.
உஸ்பெகிஸ்தான் நாட்டுடன் தொடர்ந்து உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது குறித்து உஸ்பெகிஸ்தான் விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தெடர்ந்து, பிரதமர் மோடி பேசியாவது...
இன்று மத்திய ஆசியாவில் உள்ள 5 நாடுகளின் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளேன். இது மத்திய ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்த வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தியா முதலீட்டாளர்களுக்காக சாதகமான கொள்கைகள் வேண்டும். இதனை அதிபர் இஸ்லாம் கரிமோ ஏற்றுக்கொண்டுள்ளார்.
சமீப காலமாக இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும், பரஸ்பர நம்பிக்கை, நலன்கள் அடிப்படையில் உறவை வளர்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவையும், உஸ்பெகிஸ்தானின் நலன்களை இணைக்கும்வகையில், இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்திய கலாசாரத்தையும், இந்தி மொழியையும் பாதுகாப்பதில், உஸ்பெகிஸ்தானுடன் சில நாடுகளை மட்டுமே ஒப்பிட முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications