பிரதமர் மோடி 22 ந் தேதி வாரணாசி பயணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசி மற்றும் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்ல உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடி நான்கு முறை அவரது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். இதற்கு முன்பு ஜூன் 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் வாரணாசி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் பலத்த மழை காரணமாக இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

pm modi visit to Varanasi

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசி மற்றும் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 22-ந்தேதி உத்தரபிரதேசம் செல்கிறார். காலை 10 மணிக்கு வாரணாசி செல்லும் பிரதமர், அங்கு சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் 12 மணிக்கு லக்னோ செல்லும் மோடி, அங்குள்ள அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, அம்பேத்கர் மகாசபாவில் நடைபெறும் நிகழ்ச்சி உள்ளிட்ட 3 நிகழ்வுகளில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 5.30 மணியளவில் டெல்லி திரும்புகிறார்.

மோடியின் வருகையையொட்டி மாநிலம் முழுவதும், குறிப்பாக லக்னோ, வாரணாசி நகரங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள நிலையில், அதிரடிப்படை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் அடங்கிய 12 கம்பெனிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளதாக மாநில போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+