மோடியை ஒபாமா வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால்...: ராகுல் தாக்கு
அமேதி : தனிமனிதர் ஒருவரிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருப்பதாக மோடி குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமேதி தொகுதியில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு கண் மருத்துவமனையின் 10-ம் ஆண்டு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நாட்டின் அதிகாரம் அனைத்தும் தனி மனிதரிடம் குவிந்து காணப்படுகிறது. அதிகாரம் என்பது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் வளர்ச்சி காணப்படும் . தற்போதைய நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்கள் மற்றும் பெண்கள் கைகளில் தரப்பட வேண்டும் என்பதே. மத்திய அரசு தொகுதிக்கு இரண்டு கிராமங்களை தேர்வு செய்து மாதிரி கிராமமாக ஆக்க முனைப்பு காட்டி வருகிறது. தற்போது என்னுடைய அமேதி தொகுதியில் 750 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் மாதிரி கிராமமாக மாற நான் விரும்புகிறேன்.
அமெரி்க்க அதிபர் ஒபாமா வேண்டுமானால் மோடியை செயல்மிக்க தலைவர் என புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் அப்போது தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications