மத்திய அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்களை சேர்க்க பிரதமர் மோடி முடிவு!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்களை சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 45 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இது மத்திய அரசின் மிகச் சிறிய அமைச்சரவையாக கருதப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் சிலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அருண் ஜெட்லியிடம் நிதி இலாகாவும், பாதுகாப்பு துறையும் உள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட இலாக்கா
அதுபோல வெங்கய்யா நாயுடு, நிதின்கட்காரி, ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவேத்கர் உள்பட மேலும் சில அமைச்சர்களிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. இதனால் மத்திய அமைச்சர்களில் பலர் நிர்வாக சுமையால் தவித்தபடி உள்ளனர்.

அமைச்சரவை மாற்றம்
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்து அதிருப்தியுடன் உள்ளனர். எனவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

வெளிநாட்டு பயணம்
கடந்த 3 மாதமாக அவர் தொடர்ந்து வெளி நாட்டு பயணங்கள் மேற் கொண்டதால் மத்திய அமைச்சரவையை மாற்ற இயல வில்லை. ஆனால் தற்போது மத்திய அமைச்சரவையை மாற்ற வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஆலோசனை
இதையடுத்து மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைத்து விடலாம் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

5 புதிய அமைச்சர்கள்
மாற்றப்படும் அமைச்சரவையில் 5 பேர் கூடுதலாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 5 பேருக்கும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications