11 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் ரூ. 523 கோடி சொத்துகள் முடக்கம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடியின் ரூ. 523 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் முறைகேடாக கடன் பெற்ற தொழிலதிபர் நீரவ் மோடியின் பண்ணை வீடு, பென்ட் ஹவஸ் உள்பட 21 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 523 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. ஏற்கனவே நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து வைரம், ஆபரணங்கள், பங்குகள், வங்கியில் செய்யப்பட்டிருந்த டெபாசிட்டுகள் மற்றும் விலைஉயர்ந்த கார்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தொழிலதிபர் நீரவ் மோடியின் மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய விசாரணை ஆணையமானது பண மோசடி சட்டத்தின் கீழ் மோடியின் ரூ. 81.16 கோடி மதிப்புள்ள பென்ட் ஹவுஸ் மற்றும் மும்பையின் ஒர்லி பகுதியில் கடற்கரையை ஒட்டியுள்ள சமுத்ரா மஹால் என்ற ரூ. 15.45 கோடி மதிப்புடைய அடுக்குமாடி வீட்டையும் முடக்கியுள்ளது.

இதே போன்று நீரவ் மோடி மற்றும் அவருடைய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 21 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.523.72 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த 21 சொத்துகளில் 6 குடியிருப்பு வீடுகள், 10 அலுவலக கட்டிடங்கள், புனேவில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு சோலார் பவர் பிளாண்ட், அலிபாகில் பண்ணை வீடு, அஹமத் நகர் மாவட்டத்தில் 132 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை அடங்கும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. ஏற்கனவே நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து வைரம், விலை உயர்ந்த கற்கள், ஆபரணங்கள், பங்குகள், வங்கியில் செய்யப்பட்டிருந்த டெபாசிட்டுகள் மற்றும விலைஉயர்ந்த கார்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications