செம்மரம் கடத்தியதால் இரு தமிழர்களும் ஒரு ஆந்திர புரோக்கரும் கைது - வீடியோ
நெல்லூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு தமிழர்களும் ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் புரோக்கரும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லூர்: நெல்லூர் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுய்பட்டிருந்த போது செம்மரம் கடத்தி வந்த இரு தமிழர்கள் மற்றும் ஒரு ஆந்திர மாநிலத்தவர் என மூவரை கைது செய்தனர்.
நெல்லூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு காரில் செம்மரக் கட்டைகள் இருப்பதைக் கண்டனர். அந்த காரில் இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த மோகன், பரமசிவம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த ஈஸ்வரய்யா என்ற செம்மரக் கடத்தல் புரோக்கரும் அவர்களுடன் இருந்துள்ளார். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் செம்மரக் கடத்தல் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால், ஆந்திர போலீஸ் கடத்திலில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகளை மட்டுமே கைது செய்து சிறையில் அடைக்கிறது. சில சமயங்களில் வனத்திலேயே சுட்டும் கொல்கிறது. ஆனால், இந்த ரும் கடத்தல்காரர்களை கைது செய்தது இல்லை என ஆந்திரா போலீஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.