Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.யில் கணவர் கண் முன்பு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்கார மைத்துனர்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவர் தனது கணவரின் கண் முன்பு போலீஸ்கார மைத்துனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்தவர் பிடிதா. அவரது கணவர் பிரவீன். திருமணமானதில் இருந்து பிரவீன் வரதட்சணை கேட்டு பிடிதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கணவரின் கொடுமையை பொறுத்துக் கொண்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் பிடிதா.

இந்நிலையில் வரதட்சணை பாக்கி அளிக்காததை குத்திக்காட்டி பிரவீனின் போலீஸ்கார சகோதரர் பிடிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் பிடிதாவின் கணவர் கண் முன்பு நடந்துள்ளது. சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர்.

நடந்த சம்பவம் பற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என பிரவீன் தனது மனைவியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் பிடிதா தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+