உ.பி.யில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற பாஜக தொண்டர்கள்: போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதை சீரமைக்க கோரியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கண்டித்தும் இன்று லக்னோவில் உள்ள சட்டசபை முன்பு பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லைதடையை மீறி போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை உத்தரப்பிரதேச போலீசார், தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.
அப்போது வன்முறை வெடித்தது. பா.ஜ.க. இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் கற்களை வீசி ரகளை செய்தனர். கார்களை சேதப்படுத்தினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். சிறிது நேரத்தில் லக்னோவில் அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications