ஆசாராம் மகனைத் தேடி டெல்லியில் போலீஸ் வேட்டை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயைத் தேடி டெல்லியில் போலீஸார் முகாமிட்டு தேடுதல் வேட்டையை நடத்தி வருகினறனர்.
சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் பலாத்கார வழக்குப் பாய்ந்துள்ளது. இதையடுத்து சாய் தலைமறைவாகி விட்டார். அவரை குஜராத் போலீஸார் தேடி வருகின்றனர்.
அவரைத் தேடி போலீஸ் படை டெல்லிக்கு வந்து முகாமிட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு டெல்லியில் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
நஜப்கர், ரோஹினி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் அவர் சிக்கவில்லை.
மேலும் சில இடங்களில் நாராயண் சாய் பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அங்கும் போலீஸ் படையினர் தேடி வருகின்றனர்.
சூரத்தில் அக்டோபர் 6ம் தேதி நாராயண் சாய் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications