சரிதா நாயரின் நிர்வாண வீடியோவை வாட்ஸ் ஆப்பில் லீக் செய்த போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்!
திருவனந்தபுரம்: சரிதா நாயரின் நிர்வாண வீடியோ காட்சியை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில், சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றது.
பெண் தொழில் அதிபரான சரிதாநாயர் இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
ஜாமீனில் சரிதா நாயர்:
அவருக்கு கேரள அரசியல் பிரமுகர்கள் பலர் உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட சரிதாநாயர் தற்போது ஜாமீனில் உள்ளார்.
வாட்ஸ் அப்பில் வீடியோ:
இந்த நிலையில் சரிதாநாயரின் நிர்வாண வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை மிரட்டுவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக சரிதாநாயர் குற்றம் சாட்டி இருந்தார்.
வெளியிட்டது யார்?:
மேலும் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்க பத்தனம்திட்டா கோர்ட்டில் சரிதாநாயர் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் விசாரணை:
தற்போது சரிதாநாயரின் நிர்வாண காட்சியை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது வடகரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காராக பணிபுரியும் ஸ்ரீதாஸ் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்:
இதைத்தொடர்ந்து ஸ்ரீதாசை தற்காலிக பணிநீக்கம் செய்து கோழிக்கோடு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.