சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் நண்பர் நிறுவனத்தில் கொல்கத்தா போலீஸ் ரெய்டு
கொல்கத்தா: சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் குடும்ப நண்பருக்கு சொந்தமான இடங்களில், கொல்கத்தா போலீசார் ரெய்டு நடத்தினர்.
பிரவீன் அகர்வால் என்பவருக்கு சொந்தமான ஏஞ்சலா மெர்கன்டைல் பிரைவேட் லிமிட்டட், என்ற நிறுவனத்தில் கொல்கத்தா போலீசார் ரெய்டு நடத்தினர். பிரவீன் அகர்வால் என்பவர் நாகேஷ்வரராவ் நீண்டகால குடும்ப நண்பர் என்று கூறப்படுகிறது.

ஏஞ்சலா மெர்கன்டைல் என்பது, வங்கி சேவையற்ற நிதி நிறுவனமாகும். பவ்பஜார் காவல் நிலையத்தில் இந்த நிறுவனத்திற்கு எதிராக பதியப்பட்ட புகார் அடிப்படையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சால்ட் லேக் பகுதியில் குடியிருப்பு பகுதியில் முன்பு ஏஞ்சலா நிறுவனம் செயல்பட்டு வந்தது. அங்கும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. கொல்கத்தா போலீஸ் இணை கமிஷனர், பிரவீன் திரிபாதி இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், இந்த தகவல் உண்மைதான் என்றும், இது பிரவீன் அகர்வால் நிறுவனம்தான் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இதை நாகேஷ்வரராவ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிறுவனம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது கிடையாது என்று கூறியுள்ளார்.
நாகேஷ்வரராவ் மனைவி சந்தியா இந்த நிறுவனத்தில் அதிக, அளவுக்கு வர்த்தகங்களை மேற்கொண்டிருக்கிறார். 2010-11ம் நிதியாண்டு, 2011-12ம் நிதியாண்டு மற்றும் 2013-14ம் நிதியாண்டுகளில், இந்த நிறுவனத்திடமிருந்து சந்தியாய 25லட்சம் பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முற்பட்ட நிலையில், சிபிஐயின் இடைக்கால இயக்குநராக செயல்பட்ட நாகேஷ்வரராவ் நண்பரின் நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்டுள்ள ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications