கோவிலில் ஆடு பலியிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்... இது எங்க தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கோவிலில் ஆடு பலி கொடுப்பதற்காக ஆட்டின் தலையை வெட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

police Sub-inspector suspended for sacrificing goat at family function

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தியோலி-மஞ்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் பன்வர் சிங். சில நாட்களுக்கு முன்பு பரன் மாவட்டத்தின் கஸ்பத்தானா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவிலில் பன்வர் சிங் பேரனுக்கு, மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தும் விழா நடந்தது.

கோவிலுக்கு ஆடு ஒன்று பலி கொடுக்கப்பட்டது. பன்வர் சிங் அரிவாளால் ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுத்தார். இது தொடர்பான 45 நிமிடங்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த விலங்குகள் நல வாரிய அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கோட்டா எஸ்.பி. சரத் சவுத்ரி, இந்த வீடியோ பதிவின் அடிப்படையில் பன்வர் சிங் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பன்வர் சிங் பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+