வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்! பொதுமக்கள் தர்ம அடி
அனந்தபுரம்: ஆந்திராவில் தனது வீட்டு மாடியில் குடியிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புக்கராய சமுத்திரம் மண்டல சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் ராமையா. இவரது வீட்டின் மாடியில் கணவன் மற்றும் மனைவி குடியிருந்து வருகிறார்கள். மனைவிக்கு சுமார் 35 வயது இருக்கும். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் ஆசை சப்-இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்டது.
எனவே, சம்பவத்தன்று, தனிமையில் இருந்த அந்த பெண்ணின் வீட்டுக்குள் ராமையா திடீரென நுழைந்துள்ளார். என்ன விஷயம் என்று அந்த பெண் கேட்டதற்கு, உனது கணவர் பேசுகிறார் என்று கூறி செல்போனை கொடுத்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்மும், செல்போனில் பேச முயன்றுள்ளார். அப்போதுதான், தனது கணவர் போனில் அழைக்கவில்லை என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.
இருப்பினும், அப் பெண் சுதாரிப்பதற்குள், கதவை மூடிய, ராமையா, பலாத்காரம் செய்தார். பெண்ணின் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்பதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்போர் ஓடி வந்துள்ளனர்.
அவர்கள் ராமையாவை அடித்து உதைத்தனர். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். பெண்ணை கற்பழித்த சப்- இன்ஸ்பெக்டர் ராமையா கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications