"அடையாளம்".. மீசை என் சுயமரியாதை.. கழுத்து வரை நீளமான மீசை வைத்த கான்ஸ்டபிள் அதிரடி சஸ்பெண்ட்..!
நீளமாக மீசை வைத்த கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
போபால்: மீசையை மிக நீளமாக வைத்த காரணத்தினாலும், அதை டிரிம் செய்ய மறுத்ததாலும், போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் ஆன சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.
மத்திய பிரதேச காவல்துறையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்தவர் ராகேஷ் ரானா.. இவர் அதே போக்குவரத்து பிரிவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்..
இவர் சமீப காலமாக மீசை வளர்க்க ஆரம்பித்துள்ளார்.. அந்த மீசை கழுத்து பகுதி வரை வளர்ந்து நீண்டு தொங்கி கொண்டுள்ளது.. அந்த நீண்ட மீசையுடனேயே வலம் வந்துள்ளார்..

கான்ஸ்டபிள்
இதை பார்த்த உயரதிகாரிகள், மீசையை டிரிம் செய்யும்படி ராகேஷுக்கு உத்தரவிட்டுள்ளனர்.. ஆனால், அதிகாரிகளின் பேச்சை ராகேஷ் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. அத்துடன் கழுத்து வரையிலான மீசையுடனேயே பணியாற்றி வந்துள்ளார்.. உயரதிகாரிகள் உத்தரவிட்டும், அதை பின்பற்றாததால், ராகேஷை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்..

தோற்றம்
இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்த உதவி ஆய்வாளர்-ஜெனரல் பிரசாந்த் சர்மா சொல்லும்போது, "ரானா தனது தோற்றம் குறித்து சீனியர் அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது தோற்றத்தை பரிசோதித்தபோது, கான்ஸ்டபிள் முடி வளர்த்து கழுத்து வரை மீசையுடன் காணப்பட்டார். அது மோசமாக இருந்ததால், முடியை கத்தரித்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.. ஆனால் அவர் உத்தரவுகளை பின்பற்றவில்லை.. இந்த நடவடிக்கையானது மற்ற காவலர்களையும் ஊக்கப்படுத்தும்... அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.

சஸ்பெண்ட்
ஆனால், இந்த சஸ்பெண்ட் குறித்து ராகேஷ் ரானா சொல்லும்போது, "இந்த மீசை என்னுடைய சுயமரியாதை.. அதனால்தான் வெட்டவும் மறுத்தேன்.. டிரிம் செய்யவும் மறுத்தேன்.. சீருடை விதிகளின்படி "ஒழுக்கமின்மை" என்ற பிரிவின் கீழ் என் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை பாரபட்சமாகவே நான் பார்க்கிறேன்... எத்தனையோ போலீஸ்காரர்கள், காவல்துறை அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் இப்படி மீசையை கம்பீரமாக வைத்திருக்கிறார்கள்.. அவர்களை பார்க்கும்போது அழகாக உள்ளது...

நடவடிக்கை
என் மீசை குறித்து மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? நான் கடந்த ஒரு வருடமாக என்னுடைய கடமையை சிறப்பாக செய்து வருகிறேன்... என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.. ஆனால், நான் ஒரு ராஜபுத்திரன்... என் மீசை என்னுடைய பெருமை.. சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் இந்த மீசை விஷயத்தில் மட்டும் சமரசம் செய்ய மாட்டேன்" என்று கறாராக கூறுகிறார்... மீசையின் நீளத்தை குறைக்காததால் போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications