ஓட்டு போட சொல்லி பிரச்சாரம் செய்த கோஹ்லியே ஓட்டு போடலப்பா...
டெல்லி: புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது அவர்களின் கடமை என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த கிரிக்கெட் வீரர் கோஹ்லி கடந்த 10ம் தேதி டெல்லியில் இருந்தும் வாக்களிக்கவில்லை.
வாக்களிப்பது ஜனநாயக கடமை. உங்களின் கடமையை நிறைவேற்றுங்கள் என்று தேர்தல் ஆணையம் பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.
அப்படி கடந்த ஆண்டு டெல்லி தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கோஹ்லி கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கடந்த 2012ம் ஆண்டு கலந்து கொண்டவர் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. மேலும் இம்முறை புதிய வாக்காளர்களை வாக்களிக்க அவர் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

வாக்களிக்கவில்லை
கோஹ்லியின் பெயர் டெல்லி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது. கடந்த 10ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடந்தபோது கோஹ்லி அங்கிருந்தும் வாக்களிக்கவில்லை.

பெங்களூர்
ஏப்ரல் 10ம் தேதி கோஹ்லி டெல்லியில் இல்லை பெங்களூரில் இருந்தார். அவர் வாக்களிக்க விருப்பமாக தான் இருந்தார் என்று கோஹ்லியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் இந்திய குடிமகனின் விருப்பம். ஆனால் தேர்தல் ஆணைய விளம்பர தூதுவராக இருந்து கொண்டு கோஹ்லி வாக்களிக்காதது குறித்து விசாரிக்கப்படும் என்று டெல்லி தேர்தல் அதிகாரி டாக்டர் நசிம் சையதி தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா
கோஹ்லியின் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் வாக்களிக்கவில்லை. அவர் வாக்குப்பதிவு நாள் அன்று ராஜஸ்தானில் படப்பிடிப்பில் பிசியாக இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications