மத்தியப் பிரதேசத்துக்கு என்னாச்சு.. மடமடன்னு ஏறிப் போன வாக்கு சதவீதம்.. மோடிக்கு லக்கி?
Recommended Video
போபால்: லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் வாக்குப் பதிவு சதவீதம் மிகவும் அதிகரித்திருப்பது பாஜகவுக்கு எதிரான அலை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியைத் தழுவி காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. அப்போதே இது லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டம் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.

மத்திய பிரதேச பாஜக அரசின் ஊழல்களே அந்த கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இது லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் ஆரூடங்கள் தெரிவித்தன.
லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு சதவீதம் 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 10% அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட வாக்குப் பதிவில் 11.2% வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளன.
பிரதமர் மோடிக்கு எதிரான பெரும் அலை மத்திய பிரதேசத்தில் வீசுவதால்தான் கடந்த முறையைவிட இம்முறை வாக்குப் பதிவு அதிகமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இம்முறை கணிசமான இடங்களை அள்ளிவிடும் என பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications