கல்லூரி மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்து ஆபாச படம் எடுத்த வாலிபர்கள்
விஜயவாடா: விஜயவாடாவில் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களை நிர்வாணமாக படம் எடுத்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ஒரு அபார்ட்மென்டுக்கு சென்றபோது அங்கு மாணவிகளை வைத்து ஆபாச படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் கையும், களவுமாக சிக்கினர். ஆபாச படம் எடுத்த பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சில ஆபாச சிடிக்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
வாலிபர்கள் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களுக்கு போதை பொருள் கொடுப்பார்கள். போதை ஏறிய பிறகு அவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி அந்த பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பார்கள். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்பதால் சில மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றனர்.
இந்த ஆபாச பட கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் கடந்த 6 மாதங்களாக மாணவிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து வந்துள்ளது.












Click it and Unblock the Notifications