Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பி.எஸ்.எப் பயிற்சி வகுப்பில் ப்ளூ பிலிம்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்

எல்லை பாதுகாப்பு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிகாரி ஒருவர் வழங்கவிருந்த செயல்விளக்க வீடியோவில் ஆபாச வீடியோ வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

பஞ்சாப்: எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி வீடியோவை ஒளிபரப்பு முயன்ற போது தவறுதலாக ஆபாச வீடியோ வெளியானதால் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்திய எல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த தீவிரவாதிகளோ, மற்ற நாட்டினரோ அத்துமீறி நுழையாத அரணாக உள்ளவர்கள் எல்லை பாதுகாப்பு படையினர். இதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் வீரர்களும், வீராங்கனைகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவர்களுக்கு ஆண்டுதோறும் செயல்விளக்க வீடியோ மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆண், பெண் வீரர்கள் குவிந்தனர்

ஆண், பெண் வீரர்கள் குவிந்தனர்

இதனிடையே, பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள முகாமில் 77ஆவது பட்டாலியன் படையைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான சனிக்கிழமை அனைவரும் ஓரிடத்தில் திரண்டனர். அப்போது உயரதிகாரிகள் வந்திருந்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகள்

பயிற்சிக்கான ஏற்பாடுகள்

அப்போது பயிற்சியை ஸ்லைடுகளாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வீரர்கள், வீராங்கனைகள் ஆயத்தமாகினர். அப்போது வீடியோ வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

ஒரு அதிகாரியின் லேப்டாப்பில் இருந்து அந்த பயிற்சி செயல்விளக்க வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தவறுவதாக ஆபாச வீடியோ வெளியானது.
இந்த வீடியோ ஒளிபரப்பான சுமார் 10 முதல் 15 நொடிகளுக்கு பிறகே அந்த அதிகாரி சுதாரித்து கொண்டார்.

அவசர அவசரமாக நிறுத்தம்

அவசர அவசரமாக நிறுத்தம்

இதைத் தொடர்ந்து அந்த வீடியோவை அவசர அவசரமாக நிறுத்தினர். இது உயரதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியது. என்னதான் தவறுதலாக நடந்திருந்தாலும், ஒரு பயிற்சி வீடியோ தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி இத்தனை கவனக்குறைவாக இருந்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.

பிஎஸ்எஃப் விளக்கம்

பிஎஸ்எஃப் விளக்கம்

இதுதொடர்பாக டிஜிபியும், பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளருமான ஆர்.எஸ்.கட்டாரியா வெளியிட்ட விளக்கத்தில், எல்லை பாதுகாப்பு படையானது மிகவும் உயர் ஒழுக்கம் கொண்ட படையாகும். இதுபோன்ற நிகழ்வுகளால் ஒழுக்கம் பாதிக்கப்படும். இதை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+