2021-22-ல் நாட்டின் மின்பற்றாக்குறை இருமடங்காக உயர வாய்ப்பு: ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவின் மின்பற்றாக்குறை 2021-22-ம் ஆண்டின்போது, இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டின் மின்பற்றாக்குறை 2.6% ஆக உள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக, பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை, தொழிற்சாலைகள் போன்றவற்றால், மின்சார தேவை மேலும் அதிகரித்தே வருவதாக அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021-22ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 8 முதல் 9 விழுக்காடாக தக்க வைக்க வேண்டுமெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 5.6% ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்களையும் மத்திய அரசு ஊக்குவித்தால் மட்டுமே மின் தேவையை சமாளிக்க முடியும் என்றும் அசோசெம் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர தன்மையில் வைக்க மின் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுதோறும் 7%-ஆக உள்ளவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது மிக அதிகளவு நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரித்து வருவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலானது எனவும், நீர் மின்சார உற்பத்திக்கு உரிய முக்கியத்துவமும் கவனமும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி 30% அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications