1 லட்சம் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்! இருளில் மூழ்கிய சீமாந்திரா!!
விசாகப்பட்டினம்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் 1 லட்சம் மின்சார வாரிய ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
தெலுங்கானாவுக்கு எதிராக 44-வது நாளாக கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் பணிபுரியும் 1 லட்சம் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பல மின் உற்பத்தி நிலையங்களில் பணிகள் முற்றிலும் முடங்கியது. காவலாளி உள்பட உயர் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்
ஸ்ரீகாகுளம், பிரகாசம், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் நேற்று இருளில் மூழ்கின. மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளை வரை நீடிக்க உள்ளது.