Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் நிறுவனரை தேச புதல்வன் என்ற பிரணாப் முகர்ஜி.. காங்கிரஸ் கடும் கண்டனம்

ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார், பாரத தாயின் புதல்வன் என்று பிரணாப் முகர்ஜி கூறியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார், பாரத தாயின் புதல்வன் என்று பிரணாப் முகர்ஜி கூறியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடைபெறுகிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு சென்றுள்ளார்.அவர் ஆர்எஸ்எஸ் இயக்க செயல்பாட்டாளர்களுடன் உரையாடி வருகிறார்.

Pranab Mukherjee Praises KB Hedgewar in RSS meet, Creates new Strom in Congress

அதன்பின் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார். பின் ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பாகவதத்தை சந்தித்தார். அதன்பின் ஹெட்கேவார் இல்லத்தில் இருந்து பிரணாப் பேட்டியளித்தார்.

அதில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் இருப்பதில் பெருமை கொள்கிறேன். பாரத தாயின் புதல்வன் அவர். அவருக்கு என்னுடைய அஞ்சலிகள் என்று தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் அவரது இந்த பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பு விடுக்கப்பட்ட போதே அது குறித்து பல சர்ச்சைகள் வந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம், பிரணாப்பின் மகள், ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+