உ.பி. உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!
டெல்லி: 5 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக ராம் நாயக்கும், சத்திஸ்கர் மாநில ஆளுநராக பல்ராம்ஜி தாஸ் டாண்டனும், மேற்கு வங்க மாநில ஆளுநராக கேசரி நாத் திரிபாதியும், குஜராத் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலியும், நாகலாந்து மாநில ஆளுநராக பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட பி.எல்.ஜோஷி (உத்தரப் பிரதேசம்), எம்.கே.நாராயணன் (மேற்கு வங்கம்), சேகர் தத் (சத்தீஸ்கர்), அஸ்வினி குமார் (நாகாலாந்து), பி.வி.வாஞ்சூ (கோவா) ஆகியோர் அண்மையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
எச்.ஆர்.பரத்வாஜ் (கர்நாடகம்), தேவானந்த் கொன்வர் (திரிபுரா) ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா சில நாட்களுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால் அண்மையில் மிசோரம் ஆளுநராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications