1993 மும்பை குண்டுவெடிப்பு.. யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி!
Subscribe to Oneindia Tamil

1993ஆம் ஆண்டு நிழல் உலக தாதா தாவூத் கும்பல் மும்பையை நாசம் செய்ய தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது. நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இந்த வழக்கில் யாசிப் அப்துல் ரஸ்சக் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நிழல் உலக தாதா டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன். தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மேமன், ஜனாதிபதியிடன் கருணை மனு அளித்திருந்தார்.
மேமன் தற்போது யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அரசுடன் கலந்த ஆலோசித்த பிறகு கடந்த வாரம் ஜனாதிபதி இந்த கருணை மனுவை நிராகரித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications