தப்புத் தப்பாக பேசிய தபஸ் பால் பிரணாப் முகர்ஜி மகனின் "பிரண்ட்டாம்"!!
டெல்லி: மார்க்சிஸ்ட் கட்சி பெண்களை பலாத்காரம் செய்ய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால் தனது நண்பர்தான் என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்.
மார்க்சிஸ் கட்சி பெண்களை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய வேண்டும்; தொண்டையை அரிவாள் மனையால் வெட்ட வேண்டும் என்றெல்லாம் ரத்தம் கொப்புளிக்க பேசி வருபவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான தபஸ் பால்.
இவரது பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கண்டித்த பின்னர்தான் தபஸ் பால் மன்னிப்பும் கோரினார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி, தபஸ் என்னுடைய நண்பர்தான். அவர் தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அதற்காக நாடாளுமன்ற எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையெல்லாம் ஏற்க முடியாது.
நாடாளுமன்றத்தில் அவைக்குறிப்பில் இடம்பெறாத பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியெனில் அவர்கள் அனைவரையும் நீக்க வேண்டியதும் இருக்குமே என்று கூறியிருக்கிறார்.
என்ன கொடுமையோ!