விலை உயர்வு: மோடி அரசு மீது பொதுமக்கள் கோபம்
ஹைதராபாத்: அத்தியாவசியப் பொருட்கள், டீசல், பெட்ரோல் விலை, ரயில் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் மோடி அரசு மீது கோபத்தில் உள்ளனர்.
நல்ல நாள் வருகிறது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். இதையடுத்து மோடி அரசு பதவியேற்றவுடன் மக்கள் அவர் கூறிய நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் அரசு அறிவித்த அடுத்தடுத்த விலை உயர்வு தான். இது குறித்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விலை உயர்வு
இந்த அரசு பதவிக்கு வந்த 30 நாட்களில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை, ரயில் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திவிட்டது.
நல்ல நாட்கள்
தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்ல நாட்கள் வருவதாக கூறினார்கள். ஆனால் நல்ல நாட்கள் போய் கெட்ட நாட்கள் தான் வந்துள்ளன.
அத்தியாவசியப் பொருட்கள்
அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையையும் தற்போதைய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி
அரசு இப்படி அனைத்தின் விலையையும் உயர்த்துவதால் சாதாரண மக்கள் பிழைக்கவே கஷ்டப்படுகிறார்கள். அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சாதாரண மக்கள் தான் என்கின்றனர் ஹைதராபாத்காரர்கள்.