தெலுங்கானாவின் விலை: தேர்தலில் அதிக இடங்களைக் கேட்கும் டி.ஆர்.எஸ்.- குழப்பத்தில் காங்கிரஸ்
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியுடன் இணைய வேண்டுமானால் லோக்சபா தேர்தலில் அதிக சீட்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிபந்தனை விதித்துள்ளது.
அதேபோல ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் அக்கட்சி தங்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை விதித்துள்ளதாம்.
வரும் லோக்சபா தேர்தலில் பாதி லோக்சபா சீட்டுகளையும், அதேபோல சட்டசபைத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடங்களையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸுக்கு நிபந்தனை விதித்துள்ளதாம்.

நெருக்கடி...
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதன் மூலம் வரும் லாபத்தை அப்பகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அதிக இடங்களை கேட்பதால் காங்கிரஸுக்கு நெருக்கடியாகியுள்ளது.

குழப்பம்...
மேலும் தெலுங்கானா ராஷ்ரிடிய சமிதியின் நிபந்தனைக்கு காங்கிரஸ் உடன்படுமானால், அது கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பும் என்றும் காங்கிரஸ் அஞ்சுகிறது. ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காவிட்டால் அக்கட்சி காங்கிரஸுடன் இணைய முன்வராது.

ஆதரவு தேவை...
தற்போதைய நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் உதவிதான் காங்கிரஸுக்குத் தேவை. குறைந்தது, லோக்சபா தேர்தல் வரையாவது அது தேவைப்படுகிறது. எனவே அக்கட்சியைப் பகைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதேசமயம், அக்கட்சி கேட்பதையெல்லாம் கொடுத்தால் தனது கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

உரிமை...
மேலும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு தாங்கள்தான் காரணம் என்று முழுமையாக உரிமை கொண்டாட முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிதான் அந்த உரிமையைக் கோரும் முழு தகுதியுடன் இருப்பதாக காங்கிரஸாரே கூறுகிறார்கள்.

நவீன தெலுங்கானா...
மறுபக்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட ஆரம்பித்து விட்டது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. நவீன தெலுங்கானா குறித்த பேச்சுக்களை அது ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில் நாம் காங்கிரஸிடம் முழுமையாக சரணைடையத் தேவையில்லை என்ற எண்ணமும் பல தெலுங்கானா தலைவர்களிடம் உள்ளதாம்.

பணியக் கூடாது....
13 வருடமாக தெலுங்கானா தனி மாநிலத்திற்காக கடுமையான போராட்டங்களை மேற்கொண்ட நாம் எதற்காக காங்கிரஸிடம் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். நாம் மேலே இருக்கிறோம், காங்கிரஸ் கீழே இருக்கிறது. எனவே நாம்தான் கிராக்கி செய்ய வேண்டுமே தவிர நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கும் காங்கிரஸுக்கு நாம் பணிந்து போகக் கூடாது என்பது இவர்களின் எண்ணமாகும்.

முடிவு சந்திரசேகர ராவ் கையில்...
இதற்கிடையே பாஜக பக்கமும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சில தலைவர்கள் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் சந்திரசேகர ராவ் எடுக்கப் போகும் முடிவுதான் முக்கியம் என்றும் அக்கட்சியினர் கூறுகிறார்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications