தேர்தலின் போது ஏழைகளை ஏமாற்ற வாக்குறுதிகள் வழங்கும் காங்கிரஸ்… பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காசிப்பூர்:2009ம் ஆண்டு தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி வழங்கிய கடன் சலுகைகள் மிட்டாயை காட்டி குழந்தையை ஏமாற்றுவது போன்ற ஒரு செயல் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
2019ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியை பார்வையிட்டார். அதன்பின்னர் காசிபூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :
காங்கிரஸ் கட்சி வழங்கிய கடன் சலுகைகள் மிட்டாயை காட்டி குழந்தையை ஏமாற்றுவது போன்ற ஒரு செயல். 2009ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மிட்டாய் கடையில் வழங்குவது போல ஒரு கடன் சலுகையை வழங்கினார்கள், அதில் யாருக்காவது பயன் இருந்ததா? தேர்தலுக்கு பின் உங்களை மறந்துவிட்டார்கள் அல்லவா?, ஒரு மிட்டாய் கம்பெனியை நம்புவீர்களா?
2009ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சலுகையில், அரசு சுமார் 60 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது. அதில் பயனடைந்த சுமார் 35 லட்சம் பேர் விவசாயிகள் அல்ல. விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கொள்முதல் முறைகளை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டு, கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தயாரிப்பு விலையைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை கிடைக்கும் படி வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். விவசாயிகளின் காவலனாக மத்திய அரசு இன்றும் உள்ளது.
ஆகையால் திருடர்கள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம். ஏழைகள், விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. எனவே, எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications