Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் திருமண விழாவை கொண்டாடுங்கள்.. சுற்றுலாவை ஊக்குவிக்க பிரதமர் மோடியின் புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜம்முவின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் 'வெட் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் போன்ற இந்தியாவின் அழகிய இடங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிப்பதுதான் எனது திட்டம் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்ற மோடி, அங்கு போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்திற்கு சென்றார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கம் செய்த பின்னர், இங்கு பிரதமர் மோடி வருவது இதுவே முதல்முறையாகும். எனவே இவரது வருகைக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Prime Minister Modi has said that he will implement wed in India program to promote tourism in Jammu

ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்கள் மூலமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

பக்ஷி ஸ்டேடியம் முழுவதையும் துணை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. ஸ்டேடியத்தை சுற்றி 2 கி.மீ சுற்றளவு பகுதியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. இருப்பினும் சாதாரண மக்களின் அன்றாட பணிகள் தடைப்படாமல் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேபோல ஜஹாங்கீர் சௌக்கிலிருந்து ராம்பாக் மற்றும் ராஜ்பாக்கிலிருந்து எல்.டி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் இரவு 7 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பக்ஷி ஸ்டேடியத்தில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் 140 கோடி மக்களும் அமைதியாக வாழ்வதாக கூறியுள்ளார்.

மேலும், "உங்கள் இதயங்களை வெல்லவே காஷ்மீருக்கு வந்திருக்கிறேன். இந்த அமைதியான இந்தியாவுக்கு சூட்டப்பட்ட மகுடமாக காஷ்மீர் இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பது புதிய காஷ்மீருக்கான அடித்தளம். இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றுவேன். இது மோடியின் வாக்குறுதி. சரியான நேரத்தில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உங்கள் மனதை வென்றெடுப்பேன்.

சுற்றுலாவுக்காக ஜம்மு காஷ்மீருக்கு யார் போவார்கள்? என்று கேட்ட காலம் போய், தற்போது சுற்றுலா துறையில் காஷ்மீர் கொடிகட்டி பறந்து வருகிறது. எனது அடுத்த திட்டம் 'வெட் இன் இந்தியா' (wed in india) என்பதுதான். ஜம்மு காஷ்மீர் போன்ற இந்தியாவின் அழகிய இடங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிப்பதுதான் எனது திட்டம்" என்று கூறியுள்ளார்.

இந்திய பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்துக்கொள்வது அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலேயே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். எனவேதான் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் இந்தியாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+