ஒரே மேடையில் மோடி - நிதிஷ்: மோடியை வாழ்த்தி கோஷமிட்டதால் பரபரப்பு !
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ரயில்வே நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அம் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி தோல்வி கண்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஹஜிபூர் பகுதியில் நடைபெற்ற ரயில்வே விழாவில் இரு துருவங்களாக இருந்த பிரதமர் மோடியும் , பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் தோன்றி தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

அப்போது திகா-சோனேபூர் ரயில் பாதை அருகே 2 ஆயிரத்து 921 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சாலைப் பாலத்தையும், முங்கர் பகுதியில் 2 ஆயிரத்து 274 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய மோடி, திகா - சோனேபூர் ரயில் பாதை விரைவாக நிறைவேறியதற்கு மத்திய, மாநில அரசின் ஒத்துழைப்பே காரணம் என தெரிவித்தார். வாஜ்பாய் முன்னாள் பிரதமராக இருந்த போது நிதிஷ் குமார் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது அவர் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.
பின்னர் பேசிய நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தில் பல்வேறு விழாவிற்கு நேரம் ஒதுக்கி வருகை தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தொண்டர்கள் 'மோடி மோடி' என கோஷமிட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மோடி அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அரசியல் அரங்கில் கடும் விமர்சனங்களை வைத்து, இரு துருவங்களாக இருந்த இருவரும், மேடையில் ஒருவரை ஒருவர் பாராட்டி பேசியதும் ஒரே மேடையில் தோன்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications