கலவரம் பாதித்த முசாபர்நகரில் பிரதமர், சோனியா, ராகுல்: மக்கள் கண்ணீர்- கதறல்
முசாபர்நகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று காலை 10 மணி அளவில் வந்தனர். அவர்கள் உள்ளூர் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் சேர்ந்து ஷாபூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அவர்களிடம் மக்கள் கண்ணீர் மல்க தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்றும், நிவாரண உதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும் பசிகாலான், தாவ்லி மற்றும் சஞ்சாக் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கும் அவர்கள் சென்றனர். அவர்கள் முசபார்நகர் மாவட்டத்தில் சுமார் 2 மணிநேரம் இருந்தார்கள். முன்னதாக சில நிவாரண முகாம்களுக்கு நேற்று சென்ற உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மக்கள் கருப்புக் கொடி காட்டியதுடன் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
கலவரத்தில் பலியான 47 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அகிலேஷ் அறிவித்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications