குஜராத்தில் 11 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த பள்ளி முதல்வர்
அகமதாபாத்: குஜராத்தில் 11 வயது மாணவரை அவரது சிறுநீரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்த பள்ளி முதல்வர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தனது பணியை ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூரில் டான் பாஸ்கோ ஆங்கில பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டி இருந்திருக்கிறது. இதனால் அவர் கழிவறைக்கு சென்றபோது அங்கு பெரிய வரிசை இருந்துள்ளது.
இதனால் அவர் மீண்டும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவரால் சிறுநீரை அடக்க முடியாததால் தான் வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழித்துவிட்டார். இதை பார்த்த பியூன் இது குறித்து பள்ளி முதல்வர் கிரேசி ஜோசப்பிடம் தெரிவித்துள்ளார்.
கிரேசி மாணவரை அழைத்து வகுப்பறையில் பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழித்ததற்காக கண்டித்துள்ளார். பின்னர் மாணவரின் சிறுநீரை அவரையே குடிக்க வைத்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவரின் பெற்றோர் போலீசாரை அணுகினர். ஆனார் சம்பந்தப்பட்டவர்கள் சமாதானம் ஆனதால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இதற்கிடையே முதல்வர் கிரேசி மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், தனது பணியையும் ராஜினாமா செய்தார்.
இது குறித்து கிரேசி கூறுகையில்,
நான் மாணவரின் வகுப்பு ஆசிரியரை அழைத்து அவர் முன்பு தான் சிறுவனிடம் பேசினேன். அவரை நான் எதையும் குடிக்க சொல்லவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications