சத்தீஸ்கரில் 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரயர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் கொன்டகாவ்ன் மாவட்டத்தில் உள்ள கனோரா கிராமத்தில் உயர் நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதேஷ்யாம் நேத்தம்(52). அவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதான 10ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தார். அவர்கள் உள்ளூர் பஞ்சாயத்தை அணுகி நியாயம் கேட்டனர். பஞ்சாயத்தோ தலைமை ஆசிரியருக்கு அபராதம் விதித்துவிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில் இது குறித்து அறிந்த மாவட்ட நிர்வாகம் நேத்தம் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளது. சம்பவம் நடந்து 6 மாதங்கள் கழித்து தான் நேத்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications