ரயில் பெட்டிகளின் கூரைகளில் ஏறி போராட்டம் நடத்தினால் சிறை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறியல் போராட்டங்களின் போது ரயில் கூரைகளின் மீது ஏறக்கூடாது. அப்படி மீறி ஏறினால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Protesters asked to desist from climbing atop trains

சமீபகாலமாக பல்வேறு போராட்டங்களின் போது போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்களில் ரயில் இன்ஜின்கள் மற்றும் கூரைகளின் மீது ஏற முயற்சித்து வருகிறார்கள்.

மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்கள் 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்டவையாக இருப்பதால், அத்தகு மின்தடங்களின் அருகில் 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

ரயில் இன்ஜின்களில் மேற்பகுதியும் 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால் ரயில் என்ஜின்களின் கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அது போலவே ஒரு குறிப்பிட்ட மின் கம்பி அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின்கம்பியில் உள்ள மின்சாரம் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.

எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகு போராட்டங்களின் போது ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் கூரைகளின் மீது ஏறுவதையும், மின்கம்பிகளுக்கு அருகில் வருவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இத்தகு செயல்கள் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் சிறை தண்டனை மற்றும் பெனால்டி விதிக்கத்தக்க தண்டனைக்குரிய செயலாகும் என்பதும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+