ரோகித் வெமுலாவின் பிறந்தநாளான ஜன. 30ல் டெல்லியில் திரளும் மாணவர்கள்.. 200 அமைப்புகள் தீவிரம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவரான ரோகித் வெமுலா பிறந்த தினத்தினை முன்னிட்டு டெல்லியில் வருகின்ற 30 ஆம் தேதியன்று மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த 200 மாணவ அமைப்புகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தலித் மாணவர் அமைப்புக்கும், பா.ஜ.க மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து 4 தலித் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அந்த மாணவர்களை மீண்டும் சேர்க்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ரோகித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பதவி விலக போராட்டம்:
தலித் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய நெருக்கடி கொடுத்ததாக மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி இருவர் மீதும் மாணவர்கள் குற்றம் சுமத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பதவி விலகும் வரை போராட்டம் நடத்துவோம் என்று மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

தீவிரமடையும் போராட்டம்:
இதற்கிடையே நாடெங்கும் 200 மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளன. இவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

பிறந்ததினத்தன்று முடிவு:
தற்கொலை செய்த மாணவர் ரோகித்துக்கு வருகிற 30 ஆம் தேதி பிறந்த தினமாகும். அன்று நாடெங்கும் உள்ள மாணவர்களை டெல்லியில் திரட்டி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

அதிகரிக்கும் நெருக்கடி:
இதற்காக 200 மாணவ அமைப்புகளும் ‘‘சலோ டெல்லி'' என்ற கோஷத்தை பிரபலப்படுத்தி வருகிறார்கள். மாணவ அமைப்புகளின் இந்த போராட்டம் மத்திய அரசுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் மிகப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications