ஜம்மு-காஷ்மீரில் ஐ.எஸ். கொடியுடன் ஊர்வலமாக சென்று பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தால் பதற்றம் !
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். அமைப்பின் கொடியுடன் ஊர்வலமாக சென்று பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஜாமியா மசூதி அருகே கிராம பாதுகாப்பு குழுவிற்கு எதிராக பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியையும், ஐஎஸ் அமைப்பின் கொடியையையும் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள், சிறுவர்களை முன்னிறுத்தி போராடிய போராட்டகாரர்கள் ஊர்வலமாக சென்ற போது பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திடீரென் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அமைந்த பிறகு போராட்டங்கள் அடிக்கடி வெடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்றும் அங்கு போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications