For Daily Alerts
Just In
டிச 19ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
செனையில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்வினி ராணா தெரிவித்தார்.
வங்கித் துறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சம்பள உயர்வு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றக் கோரியும், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Public sector bank employees announced strike one day strike on Dec 19 for various demands.
Story first published: Thursday, November 21, 2013, 8:35 [IST]