டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி நாகப்பட்டினத்தில் இருப்பதாகத்தான் குறிப்பிடப்படுகிறது.
காரைக்காலில் இருக்கிறது என்று குறிப்பிடப்படுவதில் குளறுபடி உள்ளது. இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினேன்' என்றார்.












Click it and Unblock the Notifications