மாணவர்களே கொலை செய்யுங்கள்... என்னிடம் வராதீர்கள்.. பல்கலைக்கழக துணைவேந்தரின் சர்ச்சை பேச்சு
காசிப்பூர்: சண்டைனு வந்தா என்னிடம் வராமா... முடிஞ்சா கொலை பண்ணுங்க என்று மாணவர்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜா ராம் யாத்வ் தான் இந்த பேச்சின் சொந்தக்காரர்.
பொதுவாக, பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருப்பவர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் வகையிலும், முன்னேற்றும் வகையிலும் பேசுவார்கள். ஆனால், கொலை செய்யுங்கள் கவலை இல்லை என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஒருவர் பேசியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் ராஜா ராம் யாதவ். சமீபத்தில் காசிப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே பேசியிருக்கிறார். அவர் பேசியது இது தான்....
இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்றால் நீங்கள் சண்டையை எதிர்கொள்ளும் போது, அழுது கொண்டு எப்போதும் என்னிடம் வந்து விடாதீர்கள். போய் அவர்களை அடியுங்கள்.
உங்களால் முடிந்தால் அவர்களை கொலை செய்யுங்கள். நாங்கள் அதனை பார்த்துக்கொள்கிறோம்"என்று கூறினார். துணை வேந்தரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் விதமாக ராஜா ராம் பேசியதால், அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications