ராதே மாவுக்கு "வெளியிலிருந்து ஆதரவு" தருகிறாரா பிரிட்னி ஸ்பியர்ஸ்...?
டெல்லி: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மாவின் சிஷ்யையாகி விட்டாரா.. இதுதான் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் குறித்து பலரும் கேட்கும் லேட்டஸ்ட் கேள்வி.
ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்து வந்தவரான பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீப காலமாக ஆன்மீக மார்க்கத்திற்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக இந்தியாவின் பக்கம் அவரது கவனம் அதிகமாக திரும்பியுள்ளது.
யோகா செய்கிறார். தியானம் செய்கிறார். தற்போது சர்ச்சை சாமியார் ராதே மாவின் பாலோயராகவும் அவர் மாறியுள்ளார். டிவிட்டரில் ராதே மாவின் தீவிர பக்தர் ஒருவரின் பக்கத்தை அவர் பாலோ செய்கிறார்.

இந்தியா மீது பாசம் கொண்ட மேற்கத்தியர்கள்
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக ஹாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தியா மீது பாசம் அதிகம் வைத்துள்ளனர். பலருக்கு இந்தியாவின் கலாச்சாரம் பிடித்துள்ளது. பலருக்கு இந்தியாவின் மத நம்பிக்கைகள் பிடித்துள்ளன. பலர் யோகாவை விரும்புகின்றனர்.

ராதே மாவை விரும்பும் பிரிட்னி
இந்த நிலையில் ராதே மாவின் தீவிர பக்தர் ஒருவரின் டிவிட்டர் பக்கத்தை லைக் செய்து அவரது பாலோயராக மாறியுள்ளர் பிரிட்னி ஸ்பியர்ஸ். இது பலரையும் விழி விரிய வைத்துள்ளது.

வாவ்.. பிரிட்னி
அந்த பக்தரின் பெயர் மனோஜ் நாயக். ராதே மா பக்த் என்ற பெயரில் தனது டிவிட்டர் பக்கத்தை வைத்துள்ளார். இதில் பாலோயராக இணைந்துள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். இது மனோஜுக்கே ஆச்சரியமாக உள்ளதாம்.

என்ன பதில் சொல்வதென்று தெரியலையே
இதுகுறித்து மனோஜ் நாயக் கூறுகையில், பிரிட்னியை எனது பக்கத்தில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என்ன பதில் எழுதுவது என்று கூடத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் நாயக்.

வெளியிலிருந்து ஆதரவா
நாயக்கின் பக்கத்தில் வந்து பாலோயராக மாறியுள்ளதால், பிரிட்னி ஸ்பியர்ஸ் மறைமுகமாக ராதே மாவை விரும்புகிறாரா, ஆதரிக்கிறாரா, பின் தொடர விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications